districts

சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.27- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 9 ஆயி ரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5  லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும்.  காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் சத்துணவு திட்ட பாது காப்பு உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ப.சத்தியவாணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சேட் முக மது வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்.பி. பழனிச்சாமி  பொதுக்குழுவை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் ஐ.அல் போன்சா கோரிக்கைகளை விளக்கி பேசி னார். மாநிலத் துணைத் தலைவர் ஆ.பெரிய சாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனை வர் க.பால்பாண்டி நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் எஸ்.கிரேஸி லில்லி  நன்றி கூறினார்.