திருச்சிராப்பள்ளி, ஏப்.18-
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங் களில் மெழுகுவர்த்தி ஏற்றி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சிராப்பள்ளியில் மாவட்டத் தலைவர் சத்தியவாணி, திருவாரூரில் மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் ஏ.வீராசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.