நவம்பர் புரட்சி தின 105 ஆம் ஆண்டு செந்தொண்டர் பேரணி மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் பொதுக்கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நவம்பர் 27 ஞாயிறன்று மாலை பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.