திருச்சிராப்பள்ளி, ஆக.22-
திருச்சி மாவட்டம் நங்கவரம் பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண்.1 கருங்காடு, வார்டு எண்.6 பாதியக்காவல்காடு, சவாரி மேடு மற்றும் காளியம்மன் கோவில் மேடு பகுதிகளில் காவிரி குடிநீர், மயானம், பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று நங்கவரம் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் தலைமையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சங்கர நாராயணன், மாவட்டச் செயலாளர் சக்தி வேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜு மற்றும் செயல் அலுவலர், துணைத்தலைவர், எண்.1,6 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை திங்களன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், வார்டு எண்.1 கருங்காடு, வார்டு எண்.6 பாதியக் காவல்காடு, சவாரி மேடு மற்றும் காளி யம்மன் கோவில் மேடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்யப்பட்டு காவிரி குடிநீர் வழங்குவது.
மேலும் அப்பணி முடி யும் வரை பேரூராட்சியால் டேங்கர் லாரி மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கு வது. வார்டு எண்.1 கருங்காடு, வார்டு எண்.6 பாதியக்காவல்காடு, சவாரிமேடு மற்றும் காளியம்மன் கோவில்மேடு பகுதிகளில் அடிப்படை வசதிகளான மயானம், பொதுக் கழிப்பிடம், வடிகால் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப் பட்டது.