கரூர், மே 15-
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் வட மாநில தொழி லாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்தனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளை யம் பகுதியில் இயங்கி வரும் வெல்லம் தயாரிக்கும் தனியார் ஆலையில் சத்தீஸ்கரைச் சேர்ந்த சிக்கரம் (18), எஸ்வந்த் (18), ஒரிசாவைச் சேர்ந்த ராஜேஷ் (19), கோகுல் (23) ஆகி யோர் ஆலையிலேயே சிமெண்ட் சீட்டுகள் போடப்பட்ட அறையில் தங்கி ருந்து இரண்டு ஆண்டுகள் வேலை செய்துவந்தனர்.
இந்நிலையில், அவர்கள் தங்கிருந்த அறைக்குள் சனிக்கிழமையன்று நள்ளி ரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் 4 பேரும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ராஜேஷ், சீக்கரம் ஆகியோருக்கு 85 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கமணி (நாமக்கல்), சி.முரு கேசன் (கரூர்) ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்து, அவர்களது உடல்நிலை குறித்து விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கோ ரிக்கை விடுத்தனர்.