அரியலூர், மே 23-
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மனுவில், “புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கும் அலுவ லக பயன்பாட்டிற்கும் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற வாய்மொழி உத்தரவின் பெயரில் ஆறு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், ஸ்கேனர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டது ஒராண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இதுவரை இதற்குண்டான தொகை ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 556-ஐ இது நாள் வரை வழங்க வில்லை. நிலுவைத் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.65 லட்சம் நிலுவைத் தொகையை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தவர்கள் திங்களன்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ள நிலையில் மற்றொரு நிறுவனம் சார்பில் நிலுவை தொகை பெற்று தரக் கோரி மனு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.