கும்பகோணம், ஏப்.27-
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ரத்த வங்கி கட்டிடத்தை கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் திறந்து வைத்தார்.
மேலும், ரத்ததான தன் ஆர்வ லர்களுக்கும், ரத்த தான முகாம் ஒருங்கி ணைப்பாளர்களுக்கும், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கும்பகோணம் தலை மை மருத்துவமனை இணை இயக்குநர் ஜி.திலகம், நிலைய மருத்துவர் பிரபாகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்து வர் கமருல் ஜமான், ரத்த வங்கி மருத் துவ அலுவலர் மருத்துவர் சுகந்தி, செவிலி யர் மற்றும் ரத்த வங்கி முகாம் ஒருங்கி ணைப்பாளர் சலீம் பாட்ஷா, செவிலி யர்கள் கண்காணிப்பாளர் கலாராணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.