districts

புதுகை புத்தகத் திருவிழா இன்று சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை, ஜூலை 29 -

    புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 30 அன்று சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான சிறப்பு போட்டியாக செஸ் போட்டி ஞாயிறன்று (ஜூலை 30) நடத்தப்படுகிறது.

    இப்போட்டி புதுக்கோட்டை நகர் மன்றத்தில் உள்ள  புத்தக விழா அரங்கில் காலை 10 மணிக்கு துவங்கும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் காலை 8 மணி முதல்  9.30 மணி வரை புத்தக விழா அரங்கில் பதிவு செய்ய  வேண்டும். பங்கேற்கும் போட்டியாளர்கள் சதுரங்க அட்டைகள்  மற்றும் காய்களை அவசியம் கொண்டு வர  வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழா மேடையில் பரிசு வழங்கி சிறப்பிக் கப்படும்.