நாகப்பட்டினம், மே 18-
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பால குறிச்சி ஊராட்சியில் புதிய மின் மாற்றி சேவையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்தார்.
கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாலகுறிச்சி ஊராட்சியில் மின் தட்டுப்பாடு இருப்பதாக பொது மக்களிட மிருந்து, சட்டமன்ற உறுப்பினருக்கு வந்த கோரிக்கை யை ஏற்று, அங்குள்ள பேருந்து நிலையத்தின் அருகில் புதிய மின்மாற்றி சேவை தொடங்குவதற்கான விழா நடை பெற்றது.
மாரியம்மன் கோவில் தெரு, மருத்துவமனை சாலை, கிழக்குத் தெரு, பொன்னாங்கண்ணி தெரு உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த மின்மாற்றி சேவை தொடங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி, ஒன்றியக் குழு உறுப்பினர் லென்ஸ்கயா சிவபாதம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணன், உள்ளாட்சி பிரதி நிதிகள், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.