districts

img

புதிய பள்ளி கட்டடம்: கட்டுமானப் பணி துவக்கம்

அய்யம்பேட்டை, டிச.8- பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே பட்டுக்குடி கிராமத்தில் ரூ.24.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கூடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி யை பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், எம்.எல்.ஏ நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, திமுக ஒன்றியப் பொருளாளர் கணே சன், ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ஒன்றி யப் பொறியாளர் சாமிநாதன், ஒன்றியக்  கவுன்சிலர் சுமதி, ஊராட்சி துணைத் தலை வர் இந்திரா காந்தி, பள்ளித் தலைமையா சிரியை விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.