திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.