சென்னை ராயபுரம் மூலகொத்தளம் சுடுகாட்டில் புதிய எரிவாயு தகன மேடையை சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநகராட்சி நிதியிலிருந்து 3 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக புகையில்லா இரண்டு எரியூட்டு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வா.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, திமுக வட்டச் செயலாளர் கவுரீஸ்வரன், 5ஆவது மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.