சிவகாசி, ஏப்.23-
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான அலுமினிய ஆலை உள்ளது. இதில், பட்டாசு ஆலைக்கு தேவையான அலுமினிய பொடிகள் தயார் செய்வதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சனிக் கிழமை மாலை திடீரென இப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அப்போது, அலுமினிய பொருட்கள் இருந்த அறையில் திடீரென தீப்பற்றியது. இதை யடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் தறையினர், தீ மேலும் பரவ விடாமல் தடுத்து நிறுத்தி னர்.