திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 -
திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தலைமை யில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் அப் பகுதி மக்களுக்கும் தொந்த ரவு உள்ளது. பள்ளி, கல் லூரி, கோவில், ரயில் நிலை யம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கக் கூடாது என்ற விதியை மீறி இக்கடை செயல்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதி கம் உள்ள நெடுஞ்சாலை பகு தியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், அந்த பகுதியே பதற்றமான சூழ லில் உள்ளது. குடிபோதை யில் பெண்களை தரக்குறை வாக பேசும் அவலமும் நடக்கிறது. மாணவர்கள் இந்திய மாணவர்கள் சங் கத்தின் தலைமையில், டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தியும், டாஸ்மாக் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. ஆனால் அந்த பட்டியலில், கல்லூரி அருகில் செயல்படும் துவாக் குடி அண்ணாவளைவு டாஸ்மாக் கடை இல்லை என் பது வேதனையாக உள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடுமாறு கேட் டுக் கொள்கிறோம்” என தெரி வித்துள்ளார்.
ஆட்சியரிடம் மனுவை கொடுக்கையில், இந்திய மாணவர் சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மகா, ஆமேஸ், வைரவளவன், ஆறுமுகசாமி, அபி, கௌ தம் ஆகியோர் உடனிருந்த னர்.