மயிலாடுதுறை, ஆக.30 - என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி மயிலாடுதுறை யில் இரண்டாவது நாளாக தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை, ஓய்வூதியர்கள் மற்றும் வாரிசுதா ரர்களின் பணப்பலன்களை வழங்க வேண் டும். சர்க்கரை ஆலையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு கூறிவிட்டு, இன்று வரை ஆலையை திறக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக ஆலையை திறக்க வேண்டும். அரசாணை பிறப்பிக்கும் போராட்டத்தை தொடரும் என அறிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 2ஆவது நாளான புத னன்று சிஐடியு செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் ஆர்.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர் ஆர். ராமானுஜம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன், தலைவர் காசிநாதன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.