மயிலாடுதுறை, அக்.16 - வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, முள்ளங்கி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, அவரைக்காய், கீரை வகை கள் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து சம்பாதிக்கும் விவ சாய தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி யில் வசித்து வருபவர்கள் என்.சந்திரமோ கன் - தாமரைச்செல்வி தம்பதி. விவசாயி களான இருவரும் தங்களது வீட்டை ஒட்டி யுள்ள 50 குழி இடத்தில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு விளைவித்து வரு கின்றனர். இயற்கை விவசாயம் செய்வது குறித்து விவசாயி சந்திரமோகன் கூறுகையில், “காலங் காலமாக எங்கள் குடும்பத்தில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் வீட்டின் அருகி லேயே உள்ள சுமார் 50 குழி இடத்தில் காய் கறிகளை இயற்கையான முறையில் பயி ரிட்டு விளைவித்து அறுவடை செய்து வரு கிறோம். எந்தவித ரசாயன உரங்களையும் போடாமல் விளைவிப்ப தால் பலரும் விரும்பி வந்து வாங்கி செல்கின்ற னர்.
இயற்கை விவசா யத்தை மற்ற விவசாயி களும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக வும், இயற்கை உணவு தான் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை உணர்த் தும் விதமாகவும் இயற்கை விவசாய முறையில் காய் கறிகளை தொடர்ச்சியாக பயிரிட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 8 கிலோவிலிருந்து 10 கிலோ வரை வெண்டைக்காய்களை செடி களிலிருந்து பறிக்கிறோம். அதேபோன்று கத்தரிக்காய், அவரைக்காய், கொத்த வரைக்காய், முள்ளங்கி ஆகியவற்றை 2, 3 தினங்களுக்கு ஒருமுறை 5 கிலோவுக்கும் மேல் அறுவடை செய்கிறோம். இது போன்றே மற்ற காய்கறிகளையும் பறிக் கிறோம். தங்களுக்கு தேவையான காய்கறி களை நம் வீட்டுத் தோட்டத்திலேயே விளை வித்துக் கொண்டால் உடல்நலம் பாதுகாக்கப் படும்” என்றார். சந்திரமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாள ராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது. வேளாண்மைத்துறை (தோட்டக்கலை) அதிகாரிகள் விவசாயி சந்திரமோகன் மற்றும் அவரது மனைவி செய்கிற இயற்கை விவ சாயத்தை ஊக்குவித்தால், இன்னும் அதிக ளவில் இயற்கை விவசாயம் செய்ய வழி வகுக்கும்.