தஞ்சாவூர், ஏப்.23-
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளங்குளத்தில் செம்மறி ஆட்டுக் கிடை போடப்பட்டுள்ளது. இதற் காக இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 300 செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டு வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் டெல்டா குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு, ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர். இந்த காலக் கட்டத்தில் இது போன்ற வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆட்டு மந்தைகளை மேய்ச்ச லுக்கு விடுவது வழக்கம். இரவு ஏதாவது ஒரு வயலில் ஆடுகள் தங்க வைக்கப்படும். இதற்கு ஆட்டுக் கிடை போடுவது என்று பெயர்.
மண் வளத்தை உயர்த்தும் என்பதால் ஆட்டு கிடைக்கு விவசாயிகளின் ஆதர வும் அதிகம் இருக்கிறது. இப்படி ஆட்டுக் கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல் களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர்.
இப்படி பட்டியில் அடைப்பதால் ஆடு களின் சிறுநீரும் புழுக்கைகளும் வய லுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். இப்படி கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள், விவசாயப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்குவர்.
தற்போது பேராவூரணி அருகே விளங்குளம் பகுதியில் சாகுபடி பணிகள் முடிந்து விட்ட நிலங்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட் டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செம்மறி யாடுகளுக்கு அங்கு பட்டி அமைத்து வயல் களில் மேய்ச்சல் காட்டி வருகின்றனர். ஆடு களைக் கிடை போடுவதால் வயலுக்கு தேவையான இயற்கை உரம் கிடைத்து விடுகிறது. அடுத்த சாகுபடியின் போது, அதற்கான பலன் அதிகளவில் கிடைக் கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பட்டி போடுபவர்களுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் ஒரு இரவுக்கு ரூ.500 முதல் 2000 வரை கூலியாக வழங்கப்படுகிறது. பக லில் வயலில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விடுவதால் அவற்றின் தீவன செலவும் மிச்சம், இரவில் வயலில் தங்க வைக்கப் படுவதால் வருமானமும் உண்டு என்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பு விவசாயிகள் தற்போது இதில் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.