புதுக்கோட்டை, ஜன.25 - டெல்டா மாவட்டங்களில் 14 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியையும், நடமா டும் வாக்குப்பதிவு விளக்க வாக னத்தையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி யானது, பழைய பேருந்து நிலை யம் வழியாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தினை சென்றடைந்தது. இப்பேரணியில் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, இராணி யார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி சென்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் தி.எம்.மஞ்சுளா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் கு.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் உலகநாதன், தனி வட்டாட்சி யர் (தேர்தல்) அ.சோனை கருப் பையா, வட்டாட்சியர் கவியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்னமராவதி பொன்னமராவதியில் நடை பெற்ற பேரணிக்கு வட்டாட்சியர் சாந்தா தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் முன்னிலை வகித்தார். பின்னர் தொடங்கிய வாக்காளர் விழிப்பு ணர்வு பிரச்சாரப் பேரணியை வட்டாட்சியர் சாந்தா முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாபநாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத் தில் நடந்த வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணியை வட்டாட்சியர் மணிகண்டன் தொடங்கி வைத் தார். பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தேர்தல் துணை வட்டாட் சியர் சுரேஷ், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், பாபநாசம் சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கல்லூரி மாண விகள் கலந்து கொண்டனர். பாபநாசம் விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சா ரம் நடந்தது. இதில் சங்கத் தலைவர் தேவராஜன், சட்ட ஆலோசகர் வழக் கறிஞர் கண்ணன், செயலர் த. கண்ணதாசன் உட்பட பலர் பங்கேற் றனர். கரூர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வியாழனன்று தேசிய வாக்காளர் தினம் தொடர்பான உறுதிமொழியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற 14 ஆவது தேசிய வாக்காளர் தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.