தஞ்சாவூர், ஜன.25 - தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சனிக் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் குந்தவை நாச்சி யார் அரசு மகளிர் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, திருக்காட்டுப் பள்ளி அரசு கல்லூரி, டாக்டர் நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பிரிஸ்ட் நிகழ்நிலை பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தா கலைக் கல்லூரி, மருது பாண்டியர் கலைக் கல்லூரி, கரந்தை உமா மகேஸ்வரனார் கலை கல்லூரி யூத் ரெட்கிராஸ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள், 34 ஆவது யூனிட் தேசிய மாணவர் படை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்ட னர். இதில், மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, யூத் ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் முருகானந்தம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் ஆட்சியர் பா.பிரியங்கா பங்க ஜம் தலைமையில், வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றனர். பேராவூரணி பேராவூரணி புதிய பேருந்து நிலை யம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவல கம் வரை பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவி கள், பேராசிரியர்கள், வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. பேரா வூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை பேரணியைத் துவக்கி வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென் றார். கல்லூரி முதல்வர் டாக்டர் இரா. திருமலைச்சாமி முன்னிலை வகித்தார். “வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்போம்” என்ற கருப்பொரு ளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி நிறைவில், புதிய வாக்கா ளர்கள் 10 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பாபநாசம் பாபநாசம் புதிய பேருந்து நிலை யம் அருகே தொடங்கிய பேரணியை பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரபு, உதவியா ளர் சித்ரா மற்றும் வருவாய் துறை யினர், ஆர்.டி.பி கல்லூரி முதல்வர் முகமது முகைதீன், கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகன், பேராசி ரியர்கள், மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் 9 வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.