districts

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி: அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்

முசிறி, செப்.30 - திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து நாமக்கல் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அடிக்கல் நாட்டு விழாவிற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.  முசிறியில் இருந்து நாமக்கல் வரை 26.890 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.184 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஹ இதில் இரண்டு வழிச்சாலை 15 கி.மீட்டர் தூரத்திற்கும், நான்கு வழிச்சாலை 11.89 கி.மீட்டர் தூரத்திற்கும் அமைக்கப்பட உள்ளன. இச்சாலையில் சிறு பாலங்கள், தடுப்பு சுவர்கள், பாதுகாப்பு சுவர்கள், பயணியர் நிழல் குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள், வடிகால் வசதி ஆகியவை அமைய உள்ளது.  இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர ஆணையர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முசிறி கோட்டாட்சியர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;