districts

img

கடற்கரை கிராமத்தில் பனை விதைகள் நடல்

தஞ்சாவூர், நவ.17 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அடைக்கத்தேவன் கடற்கரை கிராமத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பாக, முதலமைச்சரின் கனவுத் திட்டமான  தமிழ்நாடு பசுமை இயக்கம் சார்பாக ஆயிரக் கணக்கான பனை விதைகள் நடப்பட்டன.  இதில், பட்டுக்கோட்டை வனச்சரக அலு வலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர்  ஏ.சிவசங்கர், ஓட்டுநர் சண்முகம், வேட்டைத் தடுப்பு காவலர்கள், ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் வி. பாலாஜி, கிராம ஊராட்சி தலைவர், மக்கள்  நல பணியாளர்கள், கிராமப் பொதுமக்கள், இளையோர் செஞ்சிலுவை சங்கம், பள்ளித்  தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரி யர்கள், புதுத்தெரு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி மாண வர்களுக்கு கடற்பசு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.