districts

img

சோழவித்யாபுரத்தில் பகுதிநேர ரேசன் கடையை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், ஜன.18 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்கு உட்பட்ட சோழவித்யாபுரம் ஊராட்சியில் பகுதி நேர அங்காடியை வீ.பி.நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றி யம் சோழ வித்யாபுரம் ஊராட்சியில் தாய் அங்காடியில் இருந்து பிரித்து அன்னை நகர்  பகுதியில், பகுதி நேர அங்காடி திறந்து வைக்கப்பட்டது. இந்த அங்காடியில் 161 குடும்ப  அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இந்நிகழ் விற்கு சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலை வர் கோமதி தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். பகுதி நேர ரேசன் கடையை கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி  திறந்து வைத்தார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் வி.சகிலா, பொது விநியோக திட்ட இணை பதிவாளர் ஆர்.கனகசபாபதி, கீழ்வேளூர் வட் டாட்சியர் பி.எம்.அமுதா, வட்ட வழங்கல் அலு வலர் எம்.ரமேஷ், வருவாய் ஆய்வாளர் எம். தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இறுதியாக ஊராட்சி மன்ற துணைத் தலை வர் சிவஞானம் நன்றி கூறினார்.

;