districts

img

புதிய நியாய விலைக்கடையை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், நவ. 3= நாகப்பட்டினம் மாவட்டம் சின்ன தும்பூர் ஊராட்சியில்  புதிய நியாய விலை கடையை கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கீழையூர் ஒன்றியம் சின்னதும்பூர் ஊராட்சி, ஆல மழை கிராமத்தில் சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 13.64 லட்சம் செலவில்  கிராம பல்நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் ஆலமழை கிராமத்திற்கான பகுதி நேர அங்காடி செயல்பட தொடங்கி யது. இக்கட்டிடத்தை திறந்து வைத்து பொதுவிநியோகத் திட்டத்தை கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இப்பகுதியில், பகுதி நேர அங்காடி இல்லாததால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்று சின்னத்தும்பூர் பகுதியில் உள்ள தாய் அங்காடியில் பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இப்பகுதியில் அங்காடி கிடைக்கப்பெற்றதால் சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நன்றியை தெரிவித் தனர். இந்நிகழ்வில்  மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ. பார்த்தி ஆரோக்கிய மேரி, வெற்றிச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர்  டி. வெங்கட் ராமன், மாவட்ட குழு உறுப்பினர் கே. சித்தார்த்தன், ஒன்றிய பெருந்தலை வர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா இளம்பரிதி,  ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகானந்தம். ஒன்றிய கவுன்சிலர் சரண்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.