districts

img

புதிய கட்டிடங்களை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், அக்.17 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்  சட்டமன்றத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதி தாக கட்டப்பட்ட கட்டிடங்களை நாகை மாலி எம்எல்ஏ திறந்து வைத்தார். இதில்  மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பயணிகள் நிழற்குடை கீழையூர் ஒன்றியம் பிரதாபராம புரம் ஊராட்சி, ராமர் மடம் பேருந்து  நிறுத்தத்தில் ரூ.7.70 லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப் பட்டது. இது, பிரதாபராமபுரம் ஊராட்சி  மன்றத் தலைவர் சிவராஜ், சிபிஎம் கீழை யூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம். அப்துல் அஜீஸ், கீழையூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் பி.சௌரிராஜ் ஆகியோர் முன்னிலையில் திறக்கப் பட்டது. 

3 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம்

வேளாங்கண்ணி பேரூராட்சி செட்டிதெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.33.40  லட்சம் செலவில் கட்டப்பட்ட, மூன்று  வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டி டத்தை பள்ளிக் கல்வித்துறை முதன்மை  அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, வேளாங் கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா,  துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா  எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலை வர் செல்வராணி ஞானசேகரன் ஆகி யோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. நியாய விலை கடை வேளாங்கண்ணி பேரூராட்சி ஆரிய நாட்டுத்தெரு பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை, கீழ்வேளூர் வட்டாட்சி யர் க.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாத்தி ஆரோக்கியமேரி, வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நியாய விலை கடை திறந்து வைக்கப் பட்டது. ஆரிய நாட்டுத்தெரு பகுதியில்  வசிக்கும் மீனவ மக்கள் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலிக்கு நன்றி தெரிவித் தனர். 

பகுதிநேர நியாய விலை கடை திறப்பு

வேளாங்கண்ணி பேரூராட்சி செபஸ் தியார் நகர் பகுதியில், நாகப்பட்டினம்  மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் புதிய பகுதிநேர அங்கா டியை வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா  எடிசன், சிபிஎம் கிளைச் செயலாளர் எம். செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் டபிள்யூ.ஜான் முன்னிலையில் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார்.  புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்  திருக்குவளை தாலுகா ஏர்வைக் காடு பகுதியிலிருந்து திருவாரூர் வரை  புதிய வழித்தடத்தில்   பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இப்பேருந்தானது திருக்குவளை, சாட்டியக்குடி, மாவூர் வழியாக திருவாரூர் சென்றடையும். கிராமங்களில் வசிக்கக் கூடிய பெண்கள்  திருவாரூர் நகரத்திற்கு சென்று பணி புரிவதற்கும், மாணவ-மாணவிகள், பள்ளி, கல்லூரி செல்வதற்கும் இப்பே ருந்து உதவியாக இருக்கும். இந்நிகழ்ச்சிகளில் அரசுத் துறை  அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட னர்.