நாகப்பட்டினம், செப்.2- நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சங்கமங்கலம் ஊராட்சியில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பெயர் பலகையினை திறந்து வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாவட்டத் தலைவர் எம்.நன்மா றன், மாவட்டப் பொருளாளர் என்.எம்.பாலு, ஒன்றியச் செயலாளர் ஜி.சிந்தன், ஒன்றியத் தலைவர் தர்மராஜ், ஒன்றியப் பொருளாளர் என்.நவீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை ஆற்றி னர். 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.