districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி சீரமைக்கப்பட்டு நீர் நிறைந்து பொலிவாக காட்சியளிக்கும் நாகை அக்கரை குளம்

நாகப்பட்டினம்,நவ.29- நாகை நகரத்தில் மிக முக்கிய  குளங்களில் ஒன்றாக கருதும் அக்கரை குளம் குறித்து கடந்த 21- 09-2023 அன்று “நாகை நகரின் அடை யாளமாக திகழும் அக்கரைகுளம் சீரமைக்கப்படுமா” என்ற தலைப் பில்  தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.  ஏற்கனவே சிபிஎம் நாகை  நகர செயலாளர் க.வெங்கடேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தி, புகார் மனுவினை நகராட்சி ஆணையருக்குநேரில் சென்று கொடுத்தார். தீக்கதிரில் செய்தி வெளியான அன்றே நகராட்சி நிர்வாகம் உடன டியாக களத்தில் இறங்கி குளத்தை  சுற்றிலும் இருந்த முட்புதற்களை யும், கருவேல மரங்களையும் அகற்றும் பணியினை முடுக்கி விட்ட னர். சிபிஎம் நாகை நகர குழு  சார்பில் நேரடியாக சென்று ஆய்வு  செய்ததோடு மட்டுமல்லாமல் அப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட நகராட்சி ஊழியர்களுக் கும், வாகன ஓட்டுனர்களுக்கும் போதுமான உதவிகள் செய்து ஒத்து ழைப்பை கொடுத்தனர்.  இதன் காரணமாக குளத்தின்  நான்கு கரைகளும் தூய்மைப் படுத்தப்பட்டு, நடைபயிற்சி பாதை கள் சரி செய்து  தற்போது அக்கரை  குளத்தை பார்ப்பதற்கு ரம்மிய மாக காட்சியளிக்கிறது. தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியான அன்றே அக்கரை குளத்தை ஆய்வு  செய்து தூய்மைப் பணியினை உட னடியாக செய்த நகராட்சி நிர்வாகத் திற்கு சிபிஎம் நாகை நகர குழு சார்பில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதப்பட்டது. எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை  இந்த குளத்தை பயன்படுத் தும் பொதுமக்கள்  கூறுகையில், குளத்தில் தற்போது பருவமழையா லும், காவிரி நீராலும் குளம் நிறைந்து காணப்படுகிறது. குளிக்க  வருபவர்கள் குளத்தின் ஆழம் தெரி யாமல் நீரில் மூழ்கி விடுகின்றனர். கடந்த வாரத்தில் ஒரே நாளில் இருவர் நீரில் மூழ்கி இறந்து போ னது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. குளிக்க வரும் மக்கள் நீரின் அபாயத்தை உணர்த்துவதற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் .அதே போல் பெண்கள் குளிக்கும் பகுதி யில் உடை மாற்றிக் கொள்வதற் கும், பாதுகாப்பாக குளிப்பதற்கும்,  படித்துறையின் மதில் சுவரை உயர மாக அமைத்த தர வேண்டும் என்று  கோரிக்கை வைக்கின்றனர்.  மேலும் ஆயிரக்கணக்கான எளிய மக்கள் பயன்படுத்தும் இக்குளத்தின் மீது நகராட்சி நிர்வா கத்தின் கவனத்தை திருப்பும் வகையில் நடவடிக்கை எடுத்த சிபிஎம் நாகை நகர குழுவிற்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் இப்பகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம் என்று தெரி வித்தனர்.