திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 44 ஆவது வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குநர் ஆர்.விஜயாலயன் தலைமை வகித்தார். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். வெற்றியாளர்கள், அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்பு, தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பணியாற்றும் இடங்களில் கையூட்டு பெற மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.