திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-
திருச்சிராப்பள்ளி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு நல்ல திறன் மிக்க சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தினை நல்ல முறையில் செயல் படுத்த மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மகளிர் திட்ட அலுவலரை துணைத்தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலரை பொருளாளராகவும் கொண்ட குழு அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினை சிறப்பான முறையில் செயல்படுத்த அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கௌரவச் செயலாளர், இரண்டு கௌரவ இணைச் செயலாளர்கள் மற்றும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிகளுக்கு சமூகப் பணிகளில் எந்தவித புகார் களுக்கும் இடமின்றி மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையோ, நீதி மன்ற வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது. இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த தகுதிகளுடைய நபர்கள் தங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, குடும்ப விவரம் மற்றும் ஏற்கனவே மேற்கொண்ட சமூக தொண்டு கள் ஆகிய சுய விவரங்களுடன் ஜூன் 30 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.