புதுக்கோட்டை, ஜூன் 20-
இலங்கையைச் சேர்ந்த கேரிட்டாஸ் நிறுவனம் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைப் போல கிராம அறிவு மையங் களை இலங்கையில் அமைத்துள்ளனர். இந்நிலை யில், கிராம அறிவு மையங் களை எவ்வாறு அமைப்பது, செயல்படுத்துவது என்பது குறித்து பயிற்சி பெறுவதற் காக 40 பேர் கொண்ட குழு வினர் புதுக்கோட்டைக்கு வந்திருந்தனர்.
இக்குழுவினருக்கான பயிற்சி எண்ணை ஊராட் சிக்குட்பட்ட மேலப்பட்டி கிராம அறிவு மையத்திலும், புதுக்கோட்டை வேளாண் மைத்துறை அலுவலகத்தி லும் நடைபெற்றது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், கிராம அறிவு மையங்கள் மூலம் வளம்குன்றா வேளா ண்மைக்காக மேற்கொள் ளப்பட்டு வரும் செயல்பாடு கள் பற்றி விளக்கி பேசி னார். புதுக்கோட்டை வேளா ண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி, வேளாண் மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல் வேறு புதிய தொழில் நுட்பங் கள் பற்றிப் பேசினார்.
நிகழ்வில் அரிமளம் ஒன் றியக்குழுத் தலைவர் மேகலா முத்து, வேளாண்மை அலு வலர் முகமதுரபி, ஊராட்சி மன்ற தலைவர்கள் க.நாக ராஜ் (எண்ணெய்), கே.ஆர்.முருகேசன் (ஓணாங்குடி), கேரிட்டாஸ் இலங்கை தேசிய இயக்குநர் லுகி, தேசிய ஒருங்கிணைப்பாளர் நிலானி, பருவகாலமாற்ற தலைமை அலுவலர் வி.ஆர்.ஹரிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.