அறந்தாங்கி, அக்.20 - மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவுடையார்கோவில் ஒன்றி யச் செயலாளராக எம்.எஸ். கலந்தர் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோ வில் ஒன்றிய 14 ஆவது மாநாடு ஆவுடையார்கோ வில் எம்.எஸ்.கே திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு வி. வீரையா - கருணாநிதி தலைமை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பி னர் அழகர் கொடியேற்றி னார். அமீர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சங்கர் துவக்க வுரையாற்றினார். 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக எம்.எஸ்.கலந்தர் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிர மணியன் வாழ்த்திப் பேசி னார். புதிய ஒன்றிய குழு உறுப்பினர்களை அறிமுகப் படுத்தி மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் பேசி னார். ஆடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிய மித்து முழு நேர மருத்துவ மனையாக செயல்படுத்த வேண்டும். காவிரி, வைகை குண்டாறு, திட்டத்தை உட னடியாக நிறைவேற்ற வேண்டும். ஆவுடையார் கோவில் பகுதியில் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.