திருவாரூர், ஜூன் 23 -
சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (MESS) மாவட்ட அமைப்புக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
வேலையின்மை பிரச்சனை முதன்மை யானதாக மாறியுள்ளது. பெரு முதலாளித் துவ பொருளாதாரத்திற்கு ஆதரவாக ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது. வேலையின்மை இந்தியாவின் அடிப்படை பிரச்சனையாக உள்ளது. இது பொதுத் தளத்திலிருந்து மறக்கடித்து பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஊடகங்களில் விவாதிக் காமல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. வேலையின்மையோடு இணைந்து உழைப்புச் சுரண்டல் கொடூரமாக நடந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வர்க்க, வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் சார்பாக மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை அமைப்பின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
இதில் அமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன் உட்பட 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.