districts

img

அன்பு ஜோதி ஆசிரமத்தை கண்டித்து மாதர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.22- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குண்டல புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் 143 பெண்கள் மற்றும் மாற்றுத்  திறனாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி அபிஷேகப்புரம் பகுதிக்குழு சார்பில் செவ்வாயன்று எடமலைப்பட்டி புதூர் கடைவீதியில் ஆர்பாட்டம்  நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு நஜ்முநிஷா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி, மாவட்ட நிர்வாகி ரேணுகா, மாவட்டத் தலைவர் பொன்மகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.