districts

கடமானை வேட்டையாடி கறிசமைத்த 3 பேர் கைது

கடமலைக்குண்டு, ஏப்.27- தேனி மாவட்டம், வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர்  புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இந்த தகவலை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் வனக்  காப்பாளர் கமலேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ  இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்  போது ஐந்தரைப்புலி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகு தியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த தேக்கம்  பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையைக் கவுண்டன்பட்டியை சேர்ந்த ஆசைத்தம்பி (42), ஐந்தரை புலியைச் சேர்ந்த முருகன் (48) ஆகிய 3 பேரையும் வனத்  துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களி டம் இருந்து 5 கிலோ அளவில் கடமான் கறியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற் கொண்ட போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.