districts

img

ஆய்மூர் கூட்டுறவு சங்கத்தில் பணமோசடி செய்தவர்களை கைது செய்யாதது ஏன்

வேதாரண்யம், ஜூலை 22-

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த ஆய்மூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் இயங்கி வருகிறது. இங்கு விவ சாய கடன் மற்றும் விவசாய நகைக்  கடன் வழங்குவதில் பல்வேறு மோசடி கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    நகை அடகு வைத்தவர், நகையை மீட்பதற்கு சென்ற போது நகையை தராமல் ‘நாளை வாருங்கள், ஒரு வாரம் கழித்து வாருங்கள்’ என இழுத் தடித்துள்ளனர். இதனால் நகையை மீட்க சென்றவர்களுக்கு சந்தேகம் எழுந் துள்ளது. இதுகுறித்து பலரும் அங்கு  விசாரித்த போது முன்னுக்கு பின்னாக  பதில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நகைக் கடனில் பண  மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி, கடந்த ஜூன் 12 அன்று விவசாயி கள் ஆய்மூர் கூட்டுறவு கடன் சங்கத்தை  முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு  வந்த கூட்டுறவு சங்க துணை பதிவாளர்  விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  

   அதில், ஒரு மாதத்திற்குள் உரிய ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது  தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகை களை பத்திரமாக ஒப்படைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.  

    ஆனால், இந்த மோசடியில் ஈடுபட்ட வர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையில், அருந்தவபுலம் ஈ.சி.ஆரில் சாலை மறியல் நடைபெற்றது. ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட் டுறவு கடன் சங்கத்தில் பணமோசடி செய்த மூன்று பேரை கைது செய்ய  வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக் கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  என வலியுறுத்தினர்.