districts

img

மோடி அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி திருச்சியில் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 14- வேளாண் விளை பொருட்களுக்கு ஒன் றரை மடங்கு ஆதார விலை வேண்டும். விவசாயக்  கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி அரசின் தில்லு முல்லு வேலைகளை அம்பலப்படுத்தியும் ஏப்ரல் 5-ஆம்தேதி தில்லியில் நடைபெறும் பேரணியை  விளக்கி திருச்சிராப்பள்ளி மாவட்டம்  திரு வெறும்பூர், மலைக்கோவில், கைலாஷ்  நகர், காட்டூர், ஆயில் மில், அரியமங்க லம், உக்கடை, பால்பண்ணை ஆகிய இடங்களில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்  கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி சார்லஸ், சந்திரன், பீர்முகமது, சரவணன், இட்லி கணேசன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.