மயிலாடுதுறை, மே 3 - மயிலாடுதுறையில் மேதின விழா பேரணி, பொதுக்கூட்டம் ஜாக் கூட்டமைப்பு தலைவர் இராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சின்னக்கடைவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி.மணி முன்னிலை வகித்தார். ஜாக் பொதுச் செயலா ளர் த.இராயர் வரவேற்று பேசினார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.வாலண்டினா, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விதொச மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்தி ரன் நன்றி கூறினார். முன்னதாக டி.இ.எல்.சி பள்ளி முதல் சின்னக்கடை வீதிவரை பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தொழி லாளர்களின் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்ற சின்னப்பா பூங்கா வந்தடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சிங்க முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஏஐடியுசி மாநில செயலாளர் சி.சந்திர குமார், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் க.சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.