சிவகாசி, அக்.8- சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய மாநகராட்சி அலுவ லகம் கட்டும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், கட்டிடப் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில் நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை அமைச் சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு ஆகியோர் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதில், தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.அசோ கன் (சிவகாசி), ஆர். சீனி வாசன்(விருதுநகர்), எஸ். தங்கப்பாண்யன்( இராஜபாளையம்), மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.