மயிலாடுதுறை, ஏப்.2 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உறுதியளித்து பிரச்சாரம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் பகுதிகளில் இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, கொள்ளிடம், அளக்குடி, கோதண்டபுரம், புளியந்துறை, புதுப்பட்டினம், தாண்ட வன்குளம், நல்லூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வரு கிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை காரணமாக, இந்தியா கூட்டணி வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 40 தொகுதியிலும் வெற்றி பெற்று இந்திய ஜனநாயகத்தை மீட்கும் அறப்போரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். அளக்குடி பகுதியில் வெள்ளம் வந்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டு உடையாத வகையில், ரூ.24 கோடியில் பணிகளை தமிழக முதல்வர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், முதலைமேடு பகுதி யில் ரூ.8 கோடியில், நாதல்படுகை பகுதி யில் ரூ.8 கோடியில் என மொத்தம் ரூ.16 கோடியில் புயல் பாதுகாப்பு மைய கட்டடம் அமைக்கப்பட உள்ளது” என்றார். திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் எம்.பி., ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள்., பன்னீர் செல்வம். ராஜ குமார், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிர காஷ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.சீனி வாசன், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், ஊராட்சி மன்ற தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினரு மான நேதாஜி, விசிக மாவட்டச் செயலா ளர் தாமு.இனியவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.