மயிலாடுதுறை, ஏப்.13 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி யில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டி யூர், பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு, சின்னங்குடி உள்ளிட்ட மீனவர் கிரா மங்களில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அவருடன் பூம்புகார் தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.