districts

img

செம்பனார்கோவிலில் கலைத்திருவிழா

மயிலாடுதுறை, அக்.26-  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் கல்லூரி யில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி வியாழனன்று தொடங்கியது. கலை திருவிழாவை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  இசை, கவின் கலை, மொழித்திறன், நாட்டுப்புற நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டி களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.