districts

பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர்

பாபநாசம், மே 16-

   தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப் பள்ளியில் உள்ள  வடக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டப் பட்டு வரும் பள்ளிக் கட்டடத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது மாநிலங்களவை உறுப்பி னரும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சி யர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்,  மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலை வர் முத்து செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி ஆகி யோர் உடனிருந்தனர். தொடர்ந்து பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலா ளர் நாசர்  சக்கராப்பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த  கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.