மயிலாடுதுறை, மே 19-
மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதனன்று ஆய்வு செய்தார்.
காட்டுச்சேரி ஊராட்சியில் கடந்த 2000-2001 ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டப்பட்டு அரசினர் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த வீடுகள் கட்டப்பட்டு 21 ஆண்டு கள் கடந்த நிலையில், 100 வீடுகளில் 95 வீடுகள் முற்றிலும் பழுதடைந்தது, 5 வீடுகள் சிறிய அளவில் பழுதடைந்தது. இதேபோல் பெரியார் சிலை, சமுதாயக் கூடம், பள்ளி கட்டடம், அங்கன்வாடி கட்டடம், பொது விநியோக கட்டடம், நுழைவாயில் ஆகியவை பழுதடைந்தன.
இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 2021-2022 ஆம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் பழுது நீக்கம் புனரமைப்பு மற்றும் உட்கட்ட மைப்பு பணிகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 95 புதிய வீடுகள் கட்டுவதற்கும், 5 வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கும், சாலை கள் அமைப்பதற்கும், பள்ளி மற்றும் சமுதாயம் கூடங்களை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் தரமாக மேற் கொள்ளவும் உத்தரவிட்டார் மேலும் பயனாளிகளிடம் கட்டுமான பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செம்பனார் கோயில் ஒன்றியம் காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் ரூ.6 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் அய்ய னார்கோயில் குளத்தை தூர்வாரி மேம்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதேபோன்று திருக்கடையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.45.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்ப றைகள் மற்றும் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டி லான சமையல் கூடம் கட்டும் பணியை யும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.