districts

img

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் திருவாரூரில் அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், டிச.2 -  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவா ரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலை வர் கோ.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அதிக மழைப்பொழிவு உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  மேற்கொள்ளப்படும் அனைத்து நட வடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்து ழைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வடகிழக்குப் பருவ மழை கட்டுப்பாட்டு அறையில் அலுவ லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம். துணை ஆட்சியர் நிலையிலான அனைத்து வட்டாரங்களுக்கும் ஒரு குழு அளவில் ஒன்பது அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சரக அள விலும், கோட்ட அளவிலும் 13 வகை யான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம்  பாதிக்கக்கூடிய பகுதிகளாக 176 பகுதி கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 41  பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடியதாக வும், 68 பகுதிகள் மிதமாகவும், 67 பகுதி கள் குறைவாகவும் பாதிக்கக்கூடிய வையாக கண்டறியப்பட்டு, அதில் 200  நிவாரண முகாம்கள் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு வழிகாட்டுத லின்படி, 4500 முதல்நிலை மீட்பாளர் களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதிக்கக்கூடிய 176 பகுதிகளில் அமைந் துள்ள நியாய விலைக் கடைகளுக்கு வெள்ளக் கால அத்தியாவசிய பொருட் களை ஒரு மாதத்திற்கு அனுப்புவதற் காக வசதியாக, 9499 மெ.டன் அரிசி யும், 1254 மெ.டன் சர்க்கரையும், 542 மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.   மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில்  14,375 மணல் மூட்டைகளும், 94,825 சாக் குகளும், 12,710 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளன. கால்நடை களுக்காக 62 நிவாரண மையங்கள்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு 1099.51 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால் கள் தூர்வாரப்பட்டுள்ளன. 642 மரம்  அறுக்கும் இயந்திரங்கள், 163 ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் மீன்வளத்துறை மூலம் 341 படகுகள் தயார் நிலையில் உள்ளன.  வடகிழக்கு பருவமழை காலத்திற்கு  தேவையான அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன என்று  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.   முன்னதாக, பேரிடர் கால முன்னெச் சரிக்கையை தடுக்கும் விதமாக இருப்பில் உள்ள மரம் அறுக்கும் கருவி,  மோட்டார் படகு, மிதவை ஆடைகள்,  தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பொருட் கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர்.