districts

img

சீகன்பால்குவிற்கு நினைவு மணிமண்டபம் அமைக்கக் கோரி நடைபயணம்

மயிலாடுதுறை, ஜூன் 21-

     மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பிரார்த்தனை நடை பயணம் புதனன்று நடை பெற்றது.

     இந்திய மொழிகளி லேயே தமிழை முதன்முத லில் ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி  வெளியிட்ட தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு தரங்கம் பாடியில், தமிழ்நாடு அரசு  சார்பில் நினைவு மண்டபம்  அமைக்க வேண்டும். மயி லாடுதுறை-தரங்கம்பாடி இடையே இயங்கிய ரயிலை  மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பல்  வேறு கிறிஸ்தவ திருச்சபை களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நடைபயணம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி கத்தோ லிக்க திருச்சபை ஆலய வளாகத்திலிருந்து துவங் கிய நடைபயணத்திற்கு  கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பிஷப் என்.ஜேக்  கப் செல்வம், மாவட்டச் செய லாளர் பிஷப் எட்வின் வில்லி யம் ஆகியோர் தலைமை வகித்தனர். சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநர் சாமுவேல் மனுவேல் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் தலைவர் பிஷப் மோகன் தாஸ் துவக்கி வைத்தார். மெயின்ரோடு, தரங்கம்பாடி நுழைவு வாயில், ராஜவீதி வழியாக வந்தடைந்து சீகன்  பால்கு சிலைக்கு மரியாதை செலுத்தினர்.