districts

img

பொதுவேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம்

மயிலாடுதுறை. மார்ச்.17-  ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக மார்ச் 28, 29 தேதிகளில் 48 மணி நேரம் நடைபெறவுள்ள நாடு தழுவிய பொதுவேலை நிறுத்ததை  விளக்கி மயிலாடுதுறை மாவட்டத்தில் வாயிற் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சீர்காழி போக்குவரத்து கழக பணிமனை மற்றும் எருக்கூர் நவீன அரிசி ஆலை வாயிலில் புதனன்று வாயிற் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு, தொமுச மற்றும் ஏஐடியுசி, ஏஐசிசிடியு ஆகிய தொழிற்சங் கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்துக்கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.