நடிகை நித்யா ரவீந்திரன் பங்கேற்பு திருச்சிராப்பள்ளி, அக்.23 - பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஹர்ஷமித்ரா மருத்துவமனை, அக்டோபர் மாதத்தை “பிங்க் அக்டோபர்” மாதமாக கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் ஹர்ஷமித்ரா புற்று நோய் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை, ரோஸ் கார்டன் இலவச அறக் கட்டளை இணைந்து நடத்திய மார்பக புற்று நோயிலிருந்து குணமடைந்தோர் சந்திப்பு நிகழ்ச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்து வமனையில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. கோவிந்தராஜ் வர்த னன், செயல் இயக்குநர் டாக்டர் பொ.சசி பிரியா ஆகியோர் வரவேற்றனர். இதில் தன லட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக முதல்வ ரும், அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஏ.துளசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “நோய் வருமுன் காப்பது சிறந்தது. நோய் வந்த பின்னர் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இருந்தால் எந்த வகையான புற்றுநோயிலிருந்தும் மீள முடியும். 70 வயதில் வயிற்று புற்று நோய்க்கு ஆபரேஷன் செய்த எனது தாயார் இன்றைக்கு 95 வயதிலும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றார். மணப்பாறை பாலாஜி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மகப்பேறு நிபுணர் டாக்டர் மென்மொழி, மணிகண்டம் செர்வைட் செவிலியர் கல்லூரி செயலாளர் சகாய மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரைப்பட நடிகையும், டப்பிங் கலைஞரு மான கலைமாமணி நித்யா ரவீந்திரன் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரு பவர்கள் கலந்து கொண்டனர். இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்த னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ மனை செயல் இயக்குநர் டாக்டர் சசி பிரியா செய்தார்.