அறந்தாங்கி, ஜூலை 31-
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஒன்றியம் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் போட்டோ ஸ்டூ டியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெய தேவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவர்களது 2-ஆவது மகன் ஹரிராஜ் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 532 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இந் நிலையில், இவர் மருத்து வம் படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந் தார். இதையடுத்து முதல் மருத்துவ கலந்தாய்வில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 21 பேருக்கு இடம் கிடைத்தது. இதில் அறந்தாங்கி ஒன்றியத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி யான அரசர்குளத்தில் இருந்து மருத்துவம் படிக்கச் செல்லும் ஹரிராஜுக்கு பெற்றோர்கள், நண்பர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மேற்பனைக் காடு ராணியம்மாள் அறக் கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன், மாணவன் ஹரி ராஜுக்கு புத்தகம் வழங்கி, சால்வை அனைத்து வாழ்த்தினார். மேலும் இவர் தேசிய அளவிலும் 2022 ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி யில் முதல் பரிசு பெற்றார்.