districts

img

மயிலாடுதுறையில் மயூரநாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

மயிலாடுதுறை, மார்ச் 9 -  மயிலாடுதுறையில் சிவராத்திரியை ஒட்டி, ஆண்டுதோறும் மயூரநாட்டி யாஞ்சலி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரியை முன் னிட்டு சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை  சார்பில் 18 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி மயூரநாதர் ஆலயத் தில் மார்ச் 7 அன்று தொடங்கி மார்ச் 10  வரை நடைபெறுகிறது. துவக்க விழாவில் சப்த ஸ்வரங்கள்  அறக்கட்டளை தலைவர் பரணிதரன் வர வேற்புரையாற்றினார்.  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்கு நர் கவிதா ராமு, மயிலாடுதுறை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகி யோர், மயூர நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்து பேசினர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட  ஆட்சியரின் நற்பணிகளை பாராட்டி சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்  “மயூர நன்னெறி செம்மல்” என்ற விரு தும், தமிழ்நாடு கைத்திறன் தொழில் கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் நாட்டிய கலைஞர் கவிதா ராமு-விற்கு “மணிமேகலை பொற் சதங்கை” விருதும் ஆன்மீக திருப்பணி களை சிறப்பாக செய்து வரும் மயிலாடு துறை சௌ.விஜயகுமாருக்கு “மயூர நற்பணி நல்லரசு” என்ற விருதும் வழங்கப்பட்டது. ஆலங்குடி ஏவி பக்கிசாமி நாதஸ்வர  குழுவினரின் மங்கள இசையுடன் தொடங் கிய முதல் நாள் மயூர நாட்டியாஞ்சலி யில், மலேசியா லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர், சென்னை அனு ஷம் டான்ஸ் குரூப் டான்ஸ் குழு வினர், ஸ்ரீஞான முத்ரா குழுவினர், கோயம் புத்தூர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட குழு வினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெற்றன. 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளை  ஏராளமான கலை ஆர்வலர்கள் கண்டு  ரசித்தனர். சப்த ஸ்வரங்கள் அறக் கட்டளை செயலாளர் மாயவரம் விஸ்வ நாதன் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டி யன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத் தார். கோயில் செயல் அலுவலர் முரு கையன் தலைமை வகித்தார். இந்த நாட்டியாஞ்சலியில், இந்தியாவின் பல  பகுதிகளைச் சேர்ந்த நாட்டிய கலை ஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனை சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர். சர்வாலய அருட் பணிக் குழு செயலாளர் ஜெயப்பிர காஷ் நன்றி கூறினார்.