districts

img

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் ஆய்வு

மயிலாடுதுறை,  மே 16 -  மயிலாடுதுறை மாவட் டம் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலக  கட்டுமானப் பணிகளை  மயி லாடுதுறை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தரைதள கட்டடத்தின் அள வையும், தரத்தையும் ஆய்வு  செய்தார். அரசு விதிக ளின்படி கட்டடம் கட்டப்பட்டு வருகிறதா எனவும் சரியான  அளவு, கனத்தின் உயரம், கம்பிகளின் தரம் போன்ற வற்றை ஆய்வு செய்தார். மேலும், வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தளத்தி லும் அமையவுள்ள அலுவல கங்கள் தொடர்பாக சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் கேட்ட றிந்தார். கட்டுமானப் பணி  நடைபெற்று வரும் இடத்தி லுள்ள தரக்கட்டுபாடு ஆய்வ கத்தையும் ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட துறை  அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

;