மயிலாடுதுறை, ஜன.4 - மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்படும் வகையில், மயி லாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு நகர மையப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஜன.4 அன்று மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பியர்லஸ் திரையரங்கு எதிரே நூலகம் அமைக்க தேவையான இடத்தை ஒதுக்குவதாக மயிலாடுதுறை நகராட்சி அறிவித்தது. இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மைய நூலகம் அமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக, மயிலாடுதுறை நகரில் 26,500 சதுர அடி இடம் ஒதுக்க மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு வேண்டுகோள் வைக்கப் பட்ட நிலையில், தருமை ஆதீன மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் அதிக இடம் இருப்பதால் அங்கு இடம் தரவேண்டுமென்ற கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் ஏற்க வில்லை. அதைத் தொடர்ந்து ஆரோக்கிய நாதபுரத்தில் உள்ள நகராட்சி இடத்தில் இடம் ஒதுக்கியது. இதை முற்போக்கு அமைப்புகள், பொது மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நகரின் பிரதான பகுதி யில் இடம் இல்லை என நகராட்சி கூறிய தையடுத்து, திமுக உயர்மட்டக் குழு உறுப்பி னர் குத்தாலம் கல்யாணம் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மதிமுக, தமிழர் தேசிய முன்னணி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட 19 அமைப்பு களின் சார்பில் நகராட்சியை எதிர்த்து ஜன.4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் மாபெரும் சாலை மறியலை நடத்து வதென முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மயிலாடுதுறை பியர்லஸ் திரையரங்கு எதிரே யுள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மாவட்ட மைய நூலகம் அமைக்க ஒதுக்கித் தருவதாக நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொண் டது. இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.